"'ஜிகர்தண்டா 3' பார்த்தேன்.." பார்த்திபன் போட்ட ட்வீட்.. அதிர்ந்து போன ரசிகர்கள்

x

'ஜிகர்தண்டா 3' படம் பார்த்ததாக பார்த்திபன் வெளியிட்ட பதிவு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள 'ஜிகர்தண்டா' படத்தின் 2ம் பாகம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தை பார்த்த பார்த்திபன், 'ஜிகர்தண்டா 3' படத்தின் முதல் நாள் முதல் காட்சி பார்த்தேன், என என்றாவது ஒரு நாள் பதிவிடுவேன் என ட்வீட் செய்துள்ளார். நிறை குறைகளை சொல்ல தான் விமர்சகன் அல்ல என தெரிவித்த அவர், கார்த்திக் சுப்புராஜ் என்ற பேய் பிடித்ததால் படம் பார்த்ததாக தெரிவித்தார். இதனிடையே, முதல் வரியை மட்டும் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.



Next Story

மேலும் செய்திகள்