"சேச்சி, சேட்டன்மார்..." - கேரள ரசிகர்களிடையே மலையாளத்தில் பேசிய விஜய்

x

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில், படப்பிடிப்பில் கலந்துகொண்ட நடிகர் விஜய், ரசிகர்கள் மத்தியில் மலையாளத்தில் பேசியது, சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் "தி கோட்" படத்தின் படப்பிடிப்பு, கேரளாவில் நடைபெற்று வருகிறது. இதனிடையே திருவனந்தபுரத்தில் விஜய்யை காண ரசிகர்கள் குவிந்த நிலையில், பேருந்தின் மேல் ஏறி நின்று, ரசிகர்கள் மத்தியில் விஜய் பேசினார். அப்போது, சேச்சி, சேட்டன்மார் தங்களை கண்டது ஒருபாடு சந்தோஷம் என மலையாளத்தில் விஜய் பேசினார். இதனை கேட்டதும் ரசிகர்கள் உற்சாகமாக குரல் எழுப்பி ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து பேசிய விஜய், மலையாள மக்களின் ஓணம் பண்டிகையின் போது மக்கள் எவ்வளவு மகிழ்ச்சியாக இருப்பார்களோ, அவ்வளவு மகிழ்சியை தங்களின் முகத்தில் பார்ப்பதாக தெரிவித்தார். மேலும் தமிழகத்தில் நண்பன், நண்பிகள் போல் நீங்களும் வேற லெவல் எனவும் ரசிகர்களுக்கு விஜய் நன்றி தெரிவித்தார். இதனைக் கேட்ட ரசிகர்கள் உற்சாக வெள்ளத்தில் மூழ்கினர்.


Next Story

மேலும் செய்திகள்