திருத்தணி முருகன் கோயிலில் மனமுருகி வேண்டிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

x

திருத்தணி முருகன் கோவிலில் நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம் செய்தார். திருத்தணி முருகன் கோவிலில் மாசி பிரம்மோற்சவ விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி, கோவிலுக்கு வருகை தந்த ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அபிஷேக நிகழ்வில் கலந்துகொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டார். அவருக்கு கோவில் நிர்வாகத்தின் சார்பில் மாலை மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன.


Next Story

மேலும் செய்திகள்