"விஜய் கட்சி.. நான் தயார்" - தென்காசி காசி விஸ்வநாதர் கோயிலில் சமுத்திரகனி உறுதி

x

திரைப்பட இயக்குநரும், நடிகருமான சமுத்திரகனி, தென்காசி காசிவிஸ்வநாதர் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். கோயிலில் மாசித் திருவிழா நடைபெற்று வரும் நிலையில், கோயிலின் பிரகாரம் முழுவதையும் சுற்றி வந்த அவர், அரை மணி நேரத்திற்கும் மேலாக அனைத்து சன்னதிகளிலும் சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், கோவில் வளாகத்தில் உள்ள ஆன்மிக புத்தகக் கடையில் புத்தகம் வாங்கிய சமுத்திரக்கனி, அங்கு வந்திருந்த ரசிகர்களுடன் பொறுமையாக செல்பி எடுத்துக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது தனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், தேவைப்பட்டாலும் அவருடன் இணைந்து பணியாற்ற தயாராக இருப்பதாகவும் கூறினார்.


Next Story

மேலும் செய்திகள்