திரையுலகில் வெடித்த அடுத்த பூகம்பம்..! ரூ.22 லட்சம் மோசடி..ஜாகுவார் தங்கம் பரபரப்பு புகார்

x

தென்னிந்திய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கத்தின் பெயரில் 22 லட்ச ரூபாய் மோசடி செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, அந்த சங்கத்தின் தலைவரும், சண்டைப் பயிற்சியாளருமான ஜாகுவார் தங்கம், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார். சங்கத்திற்கு தொடர்பில்லாத 12 பேர், சங்கத்தின் பெயரில் போலி லெட்டர் பேட், சீல் ஆகியவற்றை பயன்படுத்தி மோசடி செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் தன்னை தொடர்பு கொண்டு பேசியபோது, இந்த மோசடி தெரியவந்துள்ளதாகவும் ஜாகுவார் தங்கம் கூறியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்