"இனி திரைப்படங்களுக்கு அதிகாலை காட்சிகள் இருக்காது" - நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால்

x

தமிழ்நாட்டில் திரைப்படங்களுக்கு இனி அதிகாலை காட்சிகள் இருக்காது என, நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் கூறியுள்ளார். திருச்சியில் நடிகர் விஷால் மக்கள் நல இயக்கத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த விஷால், லியோ திரைப்படத்திற்கு போலி டிக்கெட்டுகள் விற்பனை செய்ய வாய்ப்பில்லை எனவும் கூறினார். தென்னிந்திய சென்சார் போர்டு அதிகாரிகள், தங்களுக்கு மிகுந்த ஆதரவு அளிப்பதாகவும், லஞ்சம் வாங்குவதில்லை எனவும் குறிப்பிட்ட விஷால், வட இந்திய சென்சார் போர்டு அதிகாரிகள் அதற்கு நேர்மாறாக இருப்பதாகவும் வேதனை தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்