கடன் விவகாரம் - நடிகர் விஷால் வைத்த ரெக்வஸ்ட் - லைகா நிறுவனம் கொடுத்த ரியாக்‌ஷன்

x

நடிகர் விஷாலின் 21 கோடி ரூபாய் கடனை ஏற்றுக் கொண்ட லைகா நிறுவனம், அதை திருப்பி செலுத்தும் வரை விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும், லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டது. கடந்த 2019ல் ஒப்பந்தத்தை மீறியதாக, விஷால் பட நிறுவனம் மீது லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் 15 கோடி ரூபாயை டெபாசிட் செய்யவும், சொத்து விவரங்களை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்நிலையில் பணப்பரிவர்த்தனை தொடர்பாக ஆடிட்டரை நியமிக்க வேண்டும் என விஷால் தரப்பில் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு விளக்கம் அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், விஷாலின் கோரிக்கையை ஏற்பதாக, உயர் நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்