20 ஆண்டுகால சட்டப் போராட்டம்... வெற்றி கண்ட கவுண்டமணி

x

20 ஆண்டுகால சட்டப் போராட்டம்.. வெற்றி கண்ட கவுண்டமணி

தனியார் கட்டுமான நிறுவனத்திடம் இருந்து நிலத்தை மீட்டு நடிகர் கவுண்டமணி ஏறக்குறைய தனது 20 ஆண்டுகால சட்டப் போராட்டத்தில் வெற்றி கண்டுள்ளார்...

1996ல் கவுண்டமணி கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் நளினி பாய் என்பவருக்கு சொந்தமான நிலத்தை வாங்கி,

அதை ஸ்ரீ அபிராமி பவுண்டேஷன் என்ற கட்டுமான நிறுவனத்திடம் கொடுத்து 22 ஆயிரத்து 700 சதுரடி பரப்பிலான வணிக வளாகத்தை 15 மாதங்களில் கட்டி முடித்து ஒப்படைக்க வேண்டுமென ஒப்பந்தம் செய்துள்ளார்..

கட்டுமான பணிகளுக்காக 3 கோடியே 58 லட்ச ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது... 1996 முதல் 1999 வரை 1 கோடியே 4 லட்சம் ரூபாய் செலுத்திய நிலையில்,

2003 வரை கட்டுமானப் பணிகளைத் துவங்கவில்லை எனக் கூறி, கவுண்டமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு விசாரணையில் 46 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய்க்கு மட்டுமே பணிகள் முடிக்கப்பட்டது வழக்கறிஞர் ஆணையர் அறிக்கை வாயிலாகத் தெரிய வந்தது.

இதையடுத்து கவுண்டமனியிடம் இருந்து பெற்ற 5 கிரவுண்ட் 454 சதுர அடி நிலத்தை மீண்டும் அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், ஆகஸ்ட் 1, 2008 முதல் சொத்து மீண்டும் ஒப்படைக்கப்படும் நாள் வரை மாதம் ஒன்றுக்கு ஒரு லட்ச ரூபாய் வீதம் இழப்பீடாக கவுண்டமணி, அவரது மனைவி சி.எம்.சாந்தி, மகள்கள் சி.எம்.செல்வி, மற்றும் சி.எம்.சுமித்ரா ஆகியோருக்கு வழங்க வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

2019ல் தனி நீதிபதி பிறப்பித்த இந்த உத்தரவை எதிர்த்து 2021ல் ஸ்ரீ அபிராமி பவுண்டேஷன் நிறுவனம் மேல்முறையீடு செய்தது... இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை உறுதி செய்தும், கட்டுமான நிறுவனத்தின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்