"கங்கை அமரன் ஏன் வரவில்லை..?"திரைப்பட இயக்குநர் பேரரசு சரமாரியாக கேள்வி | Gangai Amaran

x

திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க தேர்தல், சென்னை வடபழனியில் உள்ள அதன் சங்க அலுவலகத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது. இத்தேர்தல் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 24-ஆம் தேதி நடைபெறவிருந்தது. இதனிடையே, அஸோசியேட் உறுப்பினர்களுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட்டிருந்தால், அதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தேர்தலுக்கு, நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது. இதனையடுத்து, தேர்தலுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து, தேர்தலுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையையும் ரத்து செய்து உத்தரவிட்டது. இந்நிலையில், நேற்று நடந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு இசையமைப்பாளர் தீனா மற்றும் இசையமைப்பாளர் சபேஷ் ஆகியோர் போட்டியிட்டனர். இதன் வாக்குகள் எண்ணும் பணி அதிகாலை முடிவடைந்த நிலையில், அதிகாரப்பூர்வ முடிவு காலை 11 மணிக்கு அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்