அத்துமீறிய தனுஷ் ரசிகர்கள்...கோவத்தின் உச்சத்தில் தேவஸ்தான ஊழியர்கள்...திருப்பதியில் ஆரவாரம்

x

ஏழுமலையானை தரிசித்த தனுஷிற்கு கோயில் வளாகத்தில் உள்ள ரங்கநாயக்க மண்டபத்தில் வேத ஆசீர்வாதங்கள் முழங்க பிரசாதம் வழங்கப்பட்டது. கோயில் முன்பாக பாதுகாப்பிற்காக தேவஸ்தானம் மற்றும் காவல்துறையினர் மட்டுமே பாதுகாப்பு பணியில் ஈடுபடுவது வழக்கம். ஆனால் வழக்கத்திற்கு மாறாக தனுஷுடன் அதிக பவுன்சர்கள் வந்ததால் தேவஸ்தான பாதுகாப்பு ஊழியர்களுக்கும் பவுன்சர்களுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது... பவுன்சர்கள் அனைவரும் வெளியில் அனுப்பப்பட்டனர்... சாமி தரிசனத்திற்குப் பிறகு வெளியில் வந்த தனுஷை பவுன்சர்கள் அழைத்துச் செல்ல முயன்றபோது ரசிகர்கள் தனுஷை சூழ்ந்து கொண்டு புகைப்படம் எடுக்க முயன்றனர்... இதனால் பரபரப்பு ஏற்பட்டது... ஒருவழியாக தேவஸ்தான விஜிலென்ஸ் ஊழியர்கள் தனுஷை பாதுகாப்பாக காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்...


Next Story

மேலும் செய்திகள்