சினிமா மட்டுமல்ல... ரசிகர்களுடன் திடீர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை.. அதிரடி காட்டும் SK

x

தமிழ் சினிமாவில் வேகமாக வளர்ந்து முன்னணி இடத்தை பிடித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். சென்னை போரூர் அருகே பரணி புத்தூரில் உள்ள திருமண மண்டபத்தில், ரசிகர்மன்ற நிர்வாகிகளை சிவகார்த்திகேயன் திடீரென சந்தித்தார். தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள், சிவகார்த்திகேயனை காண படையெடுத்து வந்தனர். நிகழ்ச்சியில் மேடையில் பேசிய சிவகார்த்திகேயன், ரசிகர்கள் மற்றும் நற்பணி இயக்க நிர்வாகிகளுடன் ஆலோசனையிலும் ஈடுபட்டுள்ளார். ரசிகர்களுடனான சிவகார்த்திகேயனின் பிரம்மாண்ட சந்திப்பு நிகழ்ச்சி, திரையுலக வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்