`பிக்பாஸ்' போட்டியாளர் கைது 5 பேருக்கு நோட்டீஸ் | Big Boss

x

புலி நகம், புலித்தோல் வைத்திருப்பதாக எழுந்த புகாரில் பா.ஜ.க. எம்.பி. உட்பட 5 பேருக்கு வனத்துறை நோட்டீஸ் வழங்கியுள்ளது.

கன்னட 'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்ற வர்த்தூர் சந்தோஷ் என்பவர் தனது கழுத்தில் புலி நகத்துடன் கூடிய சங்கிலி அணிந்திருப்பதாக கூறினார். இது தொடர்பான புகைப்படம் வைரலான நிலையில், 'பிக்பாஸ்' நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கே சென்ற வனத்துறையினர், அவரிடம் விசாரணையில் ஈடுபட்டனர். சோதனையில் அவர் அணிந்திருந்தது உண்மையான புலி நகங்கள் கொண்ட சங்கிலி என்பது தெரியவந்ததை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், நடிகர்கள் தர்ஷன், நிகில் குமாரசாமி, பாஜக எம்.பி. ஜக்கேஷ், தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் மற்றும் பிரபல சாமியார் வினய்குருஜி ஆகியோருக்கு தொடர்புடைய இடங்களில் வனத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்