நடிகர் சூர்யாவுக்கு காயம் "கங்குவா" படப்பிடிப்பில் நடந்தது என்ன..? வெளிவந்த உண்மை..!

x

கங்குவா படப்பிடிப்பில் ரோப் கேமரா அறுந்து விழுந்து நடிகர் சூர்யா காயம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் கங்குவா படத்தின் பிரம்மாண்ட சண்டை காட்சி செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் படமாக்கப்பட்டது... அப்போது ரோப் கேமராவின் ஒரு பகுதி திடீரென அறுந்த நிலையில், சுமார் 80 கிலோ மீட்டர் வேகத்தில் வந்து சூர்யாவின் தோள் மீது பலமாக மோதியது... கேமரா வருவதைக் கண்டு சண்டை பயிற்சியாளரும் சக கலைஞர்களும் சூர்யாவைப் பிடித்து இழுத்த போதிலும் துரதிர்ஷ்டவசமாக அவருக்கு காயம் ஏற்பட்டது... இதே வேகத்தில் சூர்யாவின் தலையில் ஒருவேளை ரோப் கேமரா பட்டிருந்தால் பெரும் அசம்பாவிதம் நிகழ்ந்திருக்கும் எனவும், சூர்யா நூலிழையில் உயிர் தப்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது... சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாளை அல்லது நாளை மறுநாள் மீண்டும் இந்த பகுதியில் படப்பிடிப்பு தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது... ஈவிபி பிலிம் சிட்டியில் இந்தியன் 2 படபிடிப்பின் போது கிரேன் விழுந்ததில் 2 ஊழியர்கள் பலியானதுடன், பலர் காயமடைந்தனர்... பிகில் படப்பிடிப்பின் போது கிரேனில் இருந்த லைட் விழுந்து ஒருவர் உயிரிழந்தார்... காலா படத்திற்காக செட் அமைக்கும் போது மின்சாரம் தாக்கி ஒருவர் பலியானதுடன், மார்க் ஆண்டனி படப்பிடிப்பின் போது விஷாலும் விபத்தில் சிக்கத் தெரிந்தார்... இத்தளத்தில் விபத்துகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகளை உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.


Next Story

மேலும் செய்திகள்