'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' படக்குழுவுக்கு நடிகர் ரஜினி வாழ்த்து

x

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடித்து வெளியான 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' திரைப்படம், ரசிகர்களின் பாராட்டுக்களை பெற்றுள்ளது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' ஒரு குறிஞ்சி மலர் என்றும், ரசிகர்கள் காணாத புதுமையான காட்சிகளை கொண்டது என்றும் குறிப்பிட்டுள்ளார். லாரன்சால் இப்படியும் நடிக்க முடியுமா என பிரம்மித்து விட்டதாக தெரிவித்துள்ள ரஜினிகாந்த், எஸ்.ஜே.சூர்யாவை இந்நாளின் திரையுலக நடிகவேள் என்றும் பாராட்டியுள்ளார். மேலும் படத்தில் நடிகர்களுக்கு இணையாக யானைகளும் நடித்திருப்பதாக ரஜினி குறிப்பிட்டுள்ளார். மக்களை கைதட்ட வைத்து, சிந்திக்க வைத்து, அழ வைத்த கார்த்திக் சுப்புராஜூக்கு தனது இதயங்கனிந்த வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்