21 ஆண்டுகள் நிறைவு..ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த நடிகை திரிஷா

x

கதாநாயகி ஆக அறிமுகமாகி 21 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, நடிகை திரிஷா ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். தமிழ் திரையுலகில் துணை நடிகையாக அறிமுகமான திரிஷா, மௌனம் பேசியதே திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். இந்தநிலையில், மௌனம் பேசியதே திரைப்படம் வெளியாகி 21 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதன்மூலம், கதாநாயகி ஆக 21 ஆண்டுகளை நிறைவு செய்த திரிஷா, வீடியோ வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். ரசிகர்களிடமிருந்து தொடர்ந்து கிடைக்கும் அன்பு மற்றும் ஆதரவினால்தான், தான் தற்போது இருக்கும் இடத்தில் இருப்பதாகவும், அவர் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்