"வெற்றியை தேடித்தந்த அனைவருக்கும் நன்றி"- கடிதம் மூலம் நன்றி தெரிவித்த நடிகர் சிம்பு

மாநாடு படத்திற்கு மிகப்பெரும் வெற்றியை தேடித்தந்த அனைவருக்கும் நன்றி என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.
x
மாநாடு படத்திற்கு மிகப்பெரும் வெற்றியை தேடித்தந்த அனைவருக்கும் நன்றி என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில், எப்படியாவது தன்னை நேசிப்பவர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்திற்கு ஏற்ற பலன் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதற்கு காரணமாக இருந்த சுரேஷ் காமாட்சி, வெங்கட் பிரபு, மாநாடு படக்குழு, திரையுலக நண்பர்கள் மற்றும் உலகெங்கும் இருக்கும் அனைத்து ரசிகர்களுக்கும், தான் நன்றி கடன் பட்டிருப்பதாகவும் நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்.  


Next Story

மேலும் செய்திகள்