தயாரிப்பாளர் சங்க தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு விநியோகம் தொடக்கம்

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலுக்கான வேட்புமனு விண்ணப்ப படிவம் விநியோகம் தொடங்கியது.
x
சென்னை அண்ணாசாலையில் உள்ள தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தில் நீதிபதி ஜெயச்சந்திரன் வேட்புமனு விண்ணப்ப விநியோகத்தை தொடங்கி வைத்தார். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் முத்திரையிடப்பட்ட பெட்டியில் 4 மணிக்கு வைத்து சீல் வைக்கப்பட உள்ளது. பின்னர் மாலை 5 மணிக்கு வேட்புமனு வேட்புமனு பரிசீலனை செய்யப்படுகிறது. வரும் 24ஆம் தேதி காலை 11 மணிக்கு வேட்புமனு விண்ணப்பத்தை திரும்பெற கடைசி நாளாகும். வருகிற 29ஆம் தேதி மாலை 6 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாக உள்ளது. நவம்பர் 22ஆம் தேதி சென்னை அடையாறில் உள்ள கல்லூரியில் தயாரிப்பாளர் சங்க தேர்தலுக்கான வாக்குபதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில், தலைவர் பதவிக்கு தாணு அணி, தேனாண்டாள் முரளி அணி,  டி.ராஜேந்தர் அணி என மூன்று அணிகள் போட்டியிடுகின்றன. தலைவர், இரண்டு துணை தலைவர்கள், பொருளாளர், இரண்டு செயலாளர்கள், 21 செயற்குழு உறுப்பினர்கள் என இந்த தேர்தலில் தேர்வு செய்யப்பட உள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்