ஏழை மாணவர்களுக்கு கல்வியே சிறகு - நடிகர் சூர்யா அறிக்கை
புதிய கல்வி கொள்கை குறித்து தனது கருத்துக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.
புதிய கல்வி கொள்கை குறித்து தனது கருத்துக்கு ஆதரவு தெரிவித்த அனைவருக்கும் நன்றி என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.அகரம் அறக்கட்டளை சார்பில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், புதிய கல்வி கொள்கை தொடர்பாக சில கருத்துகளை முன் வைத்தார். அவரது கருத்தை சில அரசியல் கட்சியினர் விமர்சித்தனர். இந்த நிலையில், அந்த விமர்சனத்திற்கு பதில் தரும் விதமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கல்வி என்பது ஏழைகளுக்கும், வசதியானவர்களுக்கு ஒன்றாக இல்லாத நிலையில், அனைவருக்கும் சமமான தேர்வு என்பதை மனசாட்சிபடி சிந்திக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் தரமான இலவச கல்வியை உறுதி செய்வது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும் அதில், நடிகர் சூர்யா வலியுறுத்தி உள்ளார்.
Next Story