ஜம்மு-காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் சம்பவத்தை கண்டித்து ஜெர்மனி தலைநகர் பெர்லினில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதைத் தொடர்ந்து, ஜெர்மனிவாழ் இந்தியர்கள் ஏராளமானோர் ஊர்வலமாகச் சென்று, தீவிரவாத தாக்குதலுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.