தமிழக மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடிக்க வேண்டாம் என வலியுறுத்துமாறு, திமுக எம்.பி. கனிமொழிக்கு, இலங்கை மீன்பிடித்துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் அறிவுறுத்தியுள்ளார். இலங்கை புங்குடுதீவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதால், இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.