திருவள்ளூரில் 5வது புத்தக திருவிழாவை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார். அங்குள்ள வரவேற்பு பேனரில் "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்" என்ற கவிதை இடம் பெற்றிருந்தது. இதனை பாரதியார் பாடியுள்ளார். ஆனால் பாரதிதாசன் பாடியதாக தவறுதலாக அச்சிடப்பட்டிருந்தது, தமிழ் ஆர்வலர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.