குற்றாலத்தில் 4 நாட்களுக்கு பின் வந்த குட் நியூஸ் - மகிழ்ச்சியில் சுற்றுலா பயணிகள்
தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் 4 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகளுக்கு குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.தொடர் மழையால் குற்றாலம் மெயின் அருவி மற்றும் பழைய குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. குற்றாலம் மெயின் அருவியில் வெள்ளப்பெருக்கு குறைந்ததை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.