"காந்தாரா திரைப்படம் இயற்கை வளத்தை நாடு முழுவதும் கொண்டு சென்றது"
காந்தாரா திரைப்படம் கடல் மற்றும் மலை பற்றிய வளத்தை நாடு முழுவதும் எடுத்துச்சென்றதாக நடிகரும், மாநிலங்களவை எம்பியுமான கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் தமிழ்நாடு அரசு மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான நிகழ்வில் கமல்ஹாசன் கலந்துகொண்டு உரையாற்றினார்.
அப்போது த்ரிஷயம் , பாகுபலி, புஷ்பா போன்ற படங்கள் இந்தியா முழுவதும் பேசப்பட்டது என்றும், விக்ரம், அமரன் ஆகிய திரைப்படங்கள், கதையின் உண்மைத்தன்மையே மக்கள் விரும்புவார்கள் என்பதை நிரூபித்துள்ளதாகவும் தெரிவித்தார்...