ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில், நம்பெருமாள் நெல் அளவை கண்டருளும் வைபவம் நடைபெற்றது. திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் தைத்தேர் திருவிழா 7ம் நாள் உற்சவத்தில், நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு கோயில் திருக்கொட்டாரத்தில் நெல்அளவை கண்டருளினார். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு நம்பெருமாள் அருள் பெற்றுச்சென்றனர்