திருவள்ளூர் கும்மிடிப்பூண்டியில் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் சர்வ சாதாரணமாக ஒருவர் குட்கா பாக்கெட்டுகளை பயணிகளுக்கு விற்ற சம்பவத்தின் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த நபர் விற்பனை செய்த குட்கா பாக்கெட்டுகளை ரயில் பயணிகள் பலரும் வாங்கிய நிலையில் இந்த வீடியோ காட்சிகளை வைத்து ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.