திருப்பூர் ரிதன்யா தற்கொலை வழக்கில், அவரது கணவர் மற்றும் மாமனார், மாமியாருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. வரதட்சணை கொடுமை காரணமாக புதுமணப் பெண் ரிதன்யா தற்கொலை செய்து கொண்ட வழக்கில், கைது செய்யப்பட்ட கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி மற்றும் மாமியார் சித்ரா தேவி ஆகியோர் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். இதில் மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், திருமணத்திற்கு முன்பே ரிதன்யா தற்கொலை மனநிலையில் இருந்தார் என வாதிட்டார். அதற்கு ரிதன்யா தரப்பு வழக்கறிஞர் துன்புறுத்தியதற்கான ஆதாரம் உள்ளது எனவும் ஜாமீன் வழங்கினால் சாட்சிகளை கலைக்க வாய்ப்புள்ளது எனவும் கூறினார். இதையடுத்து நீதிபதி ஏற்கனவே முக்கிய சாட்சிகளின் விசாரணை முடிந்து விட்டதால், சிறையில் வைக்க அவசியம் இல்லை என கூறி மூவருக்கும் ஜாமீன் வழங்கினார்.