Ratnagiriswarar Temple | சோமவார விழா - 1017 படிகள் உருண்டு இளைஞர் வினோத நேர்த்திக்கடன்

Update: 2025-12-08 10:53 GMT

கரூர் அருகே உள்ள அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயில் சோமவார விழாவில் இளைஞர் ஒருவர் ஆயிரத்து17 படிக்கட்டுகள் உருண்டு ஏறி சுவாமி தரிசனம் செய்தார். இவரது தாத்தா நாகராஜன் உலக அமைதிக்காகவும், மக்கள் நல்வாழ்வுக்காகவும் கடந்த 27 ஆண்டுகளாக இந்த நேர்த்திக்கடனை செலுத்தி வந்தார். அவரது மறைவிற்குப் பின் தாத்தாவின் வேண்டுதலை, தொடர்ந்து 16 வது முறையாக நங்கவரத்தை சேர்ந்த அவரது பேரன் ஜீவானந்தம் நிறைவேற்றியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்