RANIPET || திடீரென கழன்று ஓடிய பேருந்து டயர்.. - டிரைவர் எடுத்த சடன் முடிவு
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பேருந்து நிலையத்திலிருந்து கல்புதூர் பகுதி வரை செல்லக்கூடிய அரசு பேருந்து முத்துக்கடை ஆட்டோ நகர் வழியாக 30க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது. சரியாக ஆட்டோநகர் அருகே வந்த போது பேருந்தின் இடது பின் புற சக்கரமானது திடீரென கழன்று சாலையில் ஓடியதாக தெரிகிறது. இதனை கண்ட பேருந்தில் இருந்த பயணிகள் பெரும் அச்சமடைந்தனர். இதனை சுதாரித்து கொண்ட பேருந்து ஓட்டுநர் சாத்தூர்யமாக பேருந்தை சாலையின் ஓரம் நிறுத்தியதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சாலையில் சென்று நிற அரசு பேருந்து சக்கரம் திடீரென கழன்று சாலையில் ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.