தூக்கி வீசப்பட்ட இளைஞர் - நெஞ்சை பதறவைக்கும் காட்சிகள்
நீலகிரி மாவட்டம், கூடலூரில் சாலையை கடக்க முயன்ற இளைஞர் மீது வேகமாக வந்த ஆட்டோ மோதியதில், இளைஞர் தூக்கி வீசப்பட்டார். பிரதீப் என்ற இளைஞர் சாலையைக் கடந்தபோது, அந்த வழியாக வேகமாக வந்த ஆட்டோ மோதியதில், அந்த இளைஞரும், ஆட்டோ ஓட்டுநரும் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.