தமிழகத்தில் இந்தியாவின் முதல் கடற்பசு பாதுகாப்பகம் - தமிழக அரசு ஏற்பாடு
தமிழகத்தில் இந்தியாவின் முதல் கடற்பசு பாதுகாப்பகம்
வன விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் இந்தியாவில் கடற்பசு இனங்கள் பாதுகாக்கப்பட்டு வரும் நிலையில் , 448 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் இந்தியாவின் முதல் கடற்பசு பாதுகாப்பகத்தை தமிழகத்தில் அமைத்திட தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தற்போது சுமார் 240 கடற்பசுக்கள் மட்டுமே இருப்பது தெரியவந்துள்ள நிலையில்,பெரும்பான்மையான கடற்பசுக்கள் தமிழ்நாட்டின் கடற்கரை பகுதிகளில் காணப்படுகின்றன.
இவற்றை பாதுகாக்க தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளை உள்ளடக்கிய பாக்விரிகுடா கடற்பசு பாதுகாப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது.