கொடநாடு வழக்கு.. ஈபிஎஸ், சசிகலாவுக்கு வந்த குட்நியூஸ் | kodanad case

Update: 2024-12-20 09:15 GMT

நீலகிரி மாவட்டம், கொடநாடு கொலை கொள்ளை வழக்கு விசாரணை இன்று உதகையில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது, எதிரிகள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா உள்ளிட்ட 8 பேரிடம் விசாரிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் கூறி உள்ளதால் அவர்களுக்கு சம்மன் அளித்து சிபிசிஐடி போலிசார் விசாரிக்க வேண்டும் என மனு தாக்கல் செய்தனர். தற்போது வழக்கு புலன் விசாரணை கட்டத்தில் இருப்பதால் எடப்பாடி பழனிச்சாமி, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரிடம் விசாரிக்க அவசியம் இல்லை என அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். இதனை அடுத்து வழக்கு விசாரணையை ஜனவரி 24க்கு நீதிபதி ஒத்திவைத்தார். 

Tags:    

மேலும் செய்திகள்