அமலாக்கத் துறை நோட்டீசுக்கு 30 நாட்களில் விளக்கம் அளிக்கும்படி பிளிப்கார்ட் உள்ளிட்டோருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விதிகளை மீறி, 10 ஆயிரத்து 601 கோடி ரூபாய் நேரடி அந்நிய முதலீட்டை பெற்றதாக, பிளிப்கார்ட் மற்றும் அதன் துணை நிறுவனங்கள் மீது புகார் அளிக்கப்பட்ட நிலையில், இது தொடர்பாக அமலாக்கத்துறை அனுப்பிய நோட்டீஸ்க்கு எதிராக flipkart மற்றும் அதன் துணை நிறுவனங்கள் வழக்கு தொடர்ந்திருந்தன. இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், நோட்டீசுக்கு பதிலளிக்காமல் நீதிமன்றத்தை அணுகி இருக்க கூடாது என்ற அமலாக்கத் துறை வாதத்தை ஏற்று, வழக்குகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.