கூகுள்மேப் மூலம் ஸ்கெட்ச்..பங்களாக்களில் கொள்ளையடித்தது எப்படி? ஞானசேகரன் பகீர் வாக்குமூலம்

Update: 2025-02-24 04:01 GMT

சென்னையில் அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரன் திருடிய 100 சவரன் நகைகளை பள்ளிக்கரணை போலீசார் மீட்டனர். ஞானசேகரனை திருட்டு வழக்கில் கைது செய்த பள்ளிக்கரணை போலீசார், 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரண நடத்தி வருகின்றனர். அப்போது, பள்ளிக்கரணையில் பல வீடுகளை நோட்டமிட்டு 250-க்கும் மேற்பட்ட சவரன் நகைகளை கொள்ளை அடித்ததாக அவர் வாக்குமூலம் அளித்தார். அதனடிப்படையில், அவரிடம் இருந்து சுமார் 100 சவரன் நகைகளை மீட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்