அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்ட ஞானசேகரனுக்கு ரத்த பரிசோதனை நடைபெற்றது. சில நாட்களுக்கு முன்பு குரல் மாதிரி பரிசோதனை நடைபெற்ற நிலையில், ரத்த பரிசோதனை மேற்கொள்ள சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி அளித்தது. அதன் அடிப்படையில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், ஞானசேகரனுக்கு ரத்த பரிசோதனை நடைபெற்றது.