Court | Madurai | "8 வாரங்களுக்கு தடை.." - கோர்ட் அதிரடி உத்தரவு

Update: 2026-01-08 16:19 GMT

கொடைக்கானல் வனப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்பு வகை தாவரங்களை அகற்றி நாட்டு வகை மரங்களை மீட்டெடுக்க பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு தடை விதித்து மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.

ராமநாதபுரத்தைச் சேர்ந்த தீரன் திருமுருகன் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம்,

தற்போதைய அரசாணை மரங்களை வெட்டுவதற்கு அனுமதி அளிப்பது போல உள்ளதாக கருத்து தெரிவித்ததோடு, அரசாணைக்கு 8 வாரங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டனர்.

மேலும், வனத்தில் மற்ற மரங்களை அடையாளம் காண்பது தொடர்பாக, அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்