Chennai | "ஐயோ.. பாட்டிலால குத்த வராங்க பாருங்கய்யா.." - ஊழியர்களை கத்தியை காட்டி மிரட்டல்..
"ஐயோ.. பாட்டிலால குத்த வராங்க பாருங்கய்யா.." - ஊழியர்களை கத்தியை காட்டி மிரட்டல்..
கன்டோன்மென்ட் ஊழியர்களுக்கு கத்தியை காட்டி மிரட்டல். சென்னை பல்லாவரம் அருகே,முறைகேடாக குடிநீர் குழாய் அமைத்த குடும்பத்தினரை தட்டி கேட்ட கண்டோன்மென்ட் பணியாளர்களை,கத்தியை காட்டி மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.திரிசூலம் அருமணைச்சாவடி பகுதியை சேர்ந்த ஜெயக்குமாரி என்பவரது வீட்டில், அனுமதியின்றி குடிநீர் குழாய் அமைத்திருந்த நிலையில்,கண்டோன்மென்ட் ஊழியர்கள் அதனை அப்புறப்படுத்த வருகை தந்தனர். இதனால் ஆத்திரமடைந்த அவரது மகன்கள் ஜெயபால்,ஜெயக்குமார் மற்றும் பார்த்திபன் ஆகியோர், ஊழியர்களை கத்தியை காட்டி,தாக்குவது போல் அச்சுறுத்தினர்.இது குறித்த புகாரின் அடிப்படையில் மூவரிடமும் விசாரணை நடைபெறுகிறது.