மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் புதிய பயனாளிகளின் தேர்வு எப்போது என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழகத்தில் ஒரு கோடியே 14 லட்சத்து 65 ஆயிரத்து 525 மகளிருக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வரும் நிலையில், திட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு எவ்வளவு பேருக்கு கூடுதலாக வழங்க முடியுமோ, அவ்வளவு பேருக்கும் வழங்கப்படும் என பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்தார். இந்த சூழலில், புதிய பயனாளிகள் தேர்வு குறித்து முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.