மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நகைகளை ஏலம் விடும் நடவடிக்கைகள் ஓரிரு மாதங்களில் தொடங்க உள்ளன. ஜெயலலிதாவின் நகைகள் மற்றும் சொத்துக்களை தங்களிடம் ஒப்படைக்கும்படி அவரது அண்ணன் மகள் தீபா, அண்ணன் மகன் தீபக் ஆகியோர் தாக்கல் செய்த மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. இதையடுத்து, ஜெயலலிதாவின் 60 கோடி ரூபாய் மதிப்புள்ள 27 கிலோ நகைகள், ஆயிரத்து 526 ஏக்கர் நிலங்களுக்கான ஆவணங்கள், தமிழக அரசிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.