கடலூர் மாவட்டம் திட்டக்குடி, பெண்ணாடம் ஆகிய பகுதிகளில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்துகொண்ட தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசனுக்கு பட்டூரில் பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். வரவேற்பின் ஒரு பகுதியாக அமைச்சரை சுற்றி பெண்கள் கோலாட்டம் ஆடினர், அவர்களுடன் இனைந்து அமைச்சரும் கோலாட்டம் ஆடி உற்சாகபடுத்தினார்.