மாஸாக வந்திறங்கிய ரஜினிகாந்த்! - உடனே குவிந்த ரசிகர்கள் கூட்டம்

Update: 2024-03-14 12:43 GMT

ஐதராபாத்தில் நடைபெற்ற வேட்டையன் படப்பிடிப்பில் பங்கேற்ற நடிகர் ரஜினிகாந்த், படப்பிடிப்பை முடித்து சென்னை திரும்பினார். ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு, கடந்த சில மாதங்களாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் நடைபெற்றது. அதை தொடர்ந்து ஆந்திர மாநிலம் கடப்பாவிலும், தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்திலுன் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த நிலையில் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக கடந்த 9ஆம் தேதி ஐதராபாத் சென்ற நடிகர் ரஜினிகாந்த், படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பினார். சென்னை விமான நிலையத்தில் ரஜினிகாந்தை சந்தித்த ரசிகர்கள் அவருடன் செல்ஃபி எடுத்துக் மகிழ்ந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்