"இந்தியாவில் ஒலிம்பிக் நடக்கும்போது கபடியும் இடம்பெறும்" - தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேச்சு

Update: 2022-09-28 06:32 GMT

இந்தியாவில் ஒலிம்பிக் போட்டி நடக்கும் போது அதில் கபடி போட்டியும் இடம்பெறும், இந்தியா தங்க பதக்கம் வெல்லும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மதுரையில் நடைபெறும் மோடி கபடி லீக் இறுதி போட்டிக்கான தொடக்க விழாவில் பேசிய அண்ணாமலை, விளையாட்டு மூலம் அரசியல் இன்றி அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும் என்பதற்காக இந்த கபடி போட்டி நடைபெறுகிறது என்றார். மேலும், தமிழகத்தில் இதுபோன்று பிரமாண்டமாக கபடி போட்டியை யாரும் நடத்தவில்லை என் குறிப்பிட்ட அண்ணாமலை, என்ன பிரச்சினை இருந்தாலும் விளையாட்டு போட்டியை பார்த்தால் மனம் மகிழ்ச்சியாக இருக்கும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்