லஞ்சம் கேட்ட கிராம நிர்வாக அலுவலர்.. பொறி வைத்து பிடித்த லஞ்ச ஒழிப்புத்துறை!

Update: 2023-04-20 13:22 GMT

பெரம்பலூர் அருகே பட்டாமாறுதலுக்கு 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதாக கிராம நிர்வாக அலுவலர் உட்பட இருவரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். T.களத்தூர் கிராமத்தை சேர்ந்த சின்னதுரை, பட்டா மாறுதல் செய்வதற்காக, கிராம நிர்வாக அலுவலர் தீனதயாளனிடம் விண்ணப்பித்துள்ளார். அப்போது, அவர் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து சின்னதுரை பெரம்பலூர் லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில், ரசாயனம் தடவிய பணத்தை தீனதயாளனிடம் சின்னதுரை கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புதுறையினர், தீனதயாளன் மற்றும் அவரது உதவியாளர் ஈஸ்வரி ஆகிய இருவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்