ஸ்மார்ட்போன் வாங்கி தர மறுத்த தந்தை.. பைனல் இயர் மாணவன் விபரீத முடிவு

Update: 2023-04-29 03:20 GMT

மேலூரில் செல்போன் வாங்கி தராததால் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் ஆலம்பட்டியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் அண்ணாமலை. தனியார் பொறியியல் கல்லூரியில் 4 ஆம் ஆண்டு படித்து வரும் இவர், தனது பெற்றோரிடம் ஸ்மார்ட் போன் கேட்டதாகவும், அதற்கு அவரது பெற்றோர் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அண்ணாமலை வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்