புலி தாக்கி விவசாயி பரிதாப பலி…மூன்று நாட்களாக வனத்துறையினர் தீவிரத் தேடுதல்

Update: 2023-01-14 15:09 GMT

கேரளாவில் புலி தாக்கி விவசாயி பலியான நிலையில் வனத்துறையினர் புலியை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தைச் சேர்ந்த சாலு என்ற தாமஸ் அவரது மனைவியுடன் விவசாய நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்த போது புலி ஒன்று சாலுவைத் தாக்கியது. சிகிச்சைப் பலனின்றி அவர் உயிரிழந்தார். புலியை உடனடியாக பிடிக்க வேண்டும் எனவும் அப்பகுதி மக்களின் அச்சத்தை போக்க வேண்டும் எனவும் பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்பினர் கோரிக்கை முன் வைத்த நிலையில் வனத்துறையினர் புலியை தேடும் பணியில் மூன்றாவது நாளாக தீவிரமாக ஈடுபட்டனர். அதை தொடர்ந்து இன்று மயக்க ஊசி மருந்து செலுத்தி புலியைப் பிடித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்