பழமையான மாரியம்மன் கோயில் திருவிழா... திடீரென முறிந்து விழுந்த கொடிமரத்தின் உச்சி...

Update: 2023-04-07 12:48 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியத்தில் அமைந்துள்ள 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த மாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு நடந்த கொடியேற்றும் நிகழ்ச்சியில், கொடிமரம் திடீரென கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கொடி மரத்தின் உச்சி முறிந்து விழுந்த நிலையில், அச்சத்தில் பக்தர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்... அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை... இந்நிலையில், கொடிமரம் விழும் வீடியோ காட்சிகள் இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்