சூப்பர் மார்க்கெட் ஓனருக்கு மிரட்டல்... அத்துமீறி நுழைந்து பொருட்களை அள்ளிச் சென்ற நபர்கள் - பரபரப்பு சிசிடிவி காட்சி

Update: 2022-11-16 05:02 GMT

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில், பணம் கொடுக்க தாமதமானதால், ஏஜென்சி உரிமையாளர் சூப்பர் மார்க்கெட்டில் புகுந்து பொருட்களை அள்ளிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. தண்டேஸ்வரநல்லூர் பகுதியில் இயங்கி வரும் பைரோஸ் என்ற பெண்மணிக்கு சொந்தமான சூப்பர் மார்க்கெட், கனமழை காரணமாக, திறக்கப்படாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொருட்கள் வாங்கிய பணத்தை திருப்பித் தர தாமதமானதால், ஏஜென்சி உரிமையாளர் ரமேஷ் என்பவர், கடையின் உரிமையாளருக்கு போன் செய்து மிரட்டியதாக கூறப்படுகிறது. மேலும், ஏஜென்சி உரிமையாளர் தனது பணியாளர்களுடன் கடைக்கு வந்து அத்துமீறி பொருட்களை அள்ளிச் சென்றதாகவும் கடை உரிமையாளர் புகார் அளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்