போலீஸ் வேன் மோதி நோயாளி பலி.. மருந்து வாங்கி வருவதற்குள் பிரிந்த உயிர்

Update: 2023-02-12 09:59 GMT

சேலத்தில் போலீசாரின் வாகனம் மோதியதில் நோயாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் கோட்டை பகுதியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு வந்த ரவிக்குமார் என்பவர் மருந்து வாங்கி கொண்டு சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த அவ்வழியாக வந்த போலீஸ் வேன் மோதியதில், தலையில் பலத்த காயமடைந்த ரவிக்குமார் சம்பவ இடைத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து அங்கு வந்த செவ்வாய்பேட்டை போலீசார் உடலை கைப்பற்றி இறந்தவர் குறித்து விசாரணை மேற்கொண்டனர். காவல்துறை வாகனம் மோதி நோயாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்