உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்த ஒட்டகங்கள் - சென்னைக்கு அனுப்பி வைத்த போலீசார்

Update: 2023-04-15 02:31 GMT

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில், கடந்த 15 நாட்களாக கேட்பாரற்று இருந்து ஐந்து ஒட்டகங்கள், சென்னையில் உள்ள கோசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. கோபசந்திரம் கிராமத்தில், 15 நாட்களுக்கு முன்பு ஐந்து ஒட்டகங்கள் கட்டப்பட்டிருந்தன. இறைச்சிக்காக தமிழகத்துக்கு கொண்டுவரப்பட்டனவா? என்பது குறித்து விசாரணை நடத்திய சூளகிரி போலீசார், தட்சின திருப்பதி கோயிலில் கூடராம் அமைத்து ஒட்டகங்களை பராமரித்து வந்தனர். இதனிடையே, சரியான உணவு, தண்ணீர், தட்ப வெப்ப நிலை இல்லமால் ஒட்டகங்கள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டதால், சென்னையில் உள்ள தனியார் கோசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்