முதல்வர் ஸ்டாலின் குறித்து அவதூறு...வீடியோ வெளியிட்ட இருவரை தட்டி தூக்கிய போலீஸ்
தேனி மாவட்டம் போடி நாயக்கனூரில், முதல்வர் ஸ்டாலினைப் பற்றி ஆபாசமாகவும் அவதூறாகவும் பேசி சமூக ஊடகங்களில் வீடியோ வெளியிட்டதாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பாக, போடி திமுக நிர்வாகி புருஷோத்தமன் என்பவர் கொடுத்த புகாரின்பேரில், ஸ்விஸ் மணி என்கிற மணிகண்டன், சுமோ பாஸ்கரன் என்ற பாஸ்கரன் ஆகிய இருவர் மீதும் போடி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் கைது செய்தனர்.