அரசு பேருந்துக்குள் அடைமழை - குடை பிடித்து பயணித்த பயணிகள்

Update: 2022-11-13 08:21 GMT

அரசுப் பேருந்துக்குள் மழைநீர் ஒழுகியதையடுத்து பொதுமக்கள் குடை பிடித்தபடி பயணம் செய்தனர். தேனி மாவட்டத்தில் தொடர்ச்சியாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், தேனியிலிருந்து மயிலாடும்பாறை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தில் மழைநீர் ஒழுகியது. இதனால், பேருந்துக்குள் பயணிகள் குடை பிடித்தபடி பயணம் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்